அச்சமா? அவிசுவாசமா?
🤔 *ஊழியம் வளர வாய்ப்பே இல்லையா?* ஒருவிசை "புதிய ஏற்பாட்டு சபை விசுவாசிகளுக்கு தசமபாகம் கொடுக்கவேண்டும் என்கிற கட்டளை எதுவும் இல்லை" என்று அடியேன் எழுதிய ஒரு பதிவை கண்ட தேவஊழயர் ஒருவர், என் நெருங்கிய நண்பர் ஒருவரைத் தொடர்புகொண்டு, தசமபாகத்திற்கு எதிராக எதுவும் எழுதவேண்டாம் என்று என்னிடத்தில் சொல்லும்படி அவரை கேட்டுக்கொண்டார். மேலும், *ஊழியம் வளர, சுவிசேஷம் அறிவிக்க, சபைகளை ஸ்தாபிக்க, சபைக்கான இடங்களை வாங்க, சபைகளைக் கட்ட, உடன் ஊழியர்களை தாங்க, தசமபாம் கட்டாயம் கொடுக்கவேண்டும்! தசமபாகம் இல்லாமல் இவைகளை செய்யமுடியாது* என்று அவர் பத்திரிக்கையில் எழுதியிருந்ததையும் அடியேன் காணநேர்ந்தது! தசமபாகத்தைக் கொண்டுதான் ஊழியம் வளரவேண்டும், சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டும்டும், சபைகளை ஸ்தாபிக்கவேண்டும், சபைக்கான இடங்களை வாங்கவேண்டும், சபைக்கான கட்டிடங்களைக் கட்டவேண்டும், உடன் ஊழியர்களைத் தாங்கவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டிருக்கிறாரா? *ஊழிய அழைப்பு, அழைப்புக்கேற்ற கிருபை, தேவவல்லமை, வரங்கள், கிருபைகள் மற்றும் வரங்களைப் பெற்ற விசுவாசிகளின் ஊழியம், தேவஜனங்களின் காணிக்கை மற்றும் பொருளாதார ஒத